என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
Byமாலை மலர்12 Jan 2022 3:33 AM GMT (Updated: 12 Jan 2022 3:33 AM GMT)
வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கைகளை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
சென்னை:
மத்திய நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா காரணமாகவும், பல அறிக்கைகளை மின்னணு தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்கள் குறித்து வரி செலுத்துவோர் மற்றும் இதர தரப்பில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் பலவிதமான தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை மேலும் நீட்டிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் முடிவு செய்தது.
2020-2021-ம் நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான கடைசி தேதி செப்டம்பர் 30-ந்தேதியாக இருந்தது. பின்னர் இது அக்டோபர் 31-ந்தேதியாகவும், இந்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது இதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2020-2021-ம் ஆண்டில் சர்வதேச பரிவர்த்தனை மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்களின் அறிக்கையை கணக்காளர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, அக்டோபர் 31-ந்தேதியாக இருந்தது. பின்பு இது நவம்பர் 30-ந்தேதியாகவும் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது கடைசி தேதி பிப்ரவரி 15-ந்தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரி தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான கடைசி தேதி அக்டோபர் 31-ந்தேதியாக இருந்தது. பின்னர் இது நவம்பர் 30-ந்தேதியாகவும், இந்த ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சுற்றறிக்கைகளை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரி வாரிய கமிஷனர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கொரோனா காரணமாகவும், பல அறிக்கைகளை மின்னணு தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்கள் குறித்து வரி செலுத்துவோர் மற்றும் இதர தரப்பில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் பலவிதமான தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை மேலும் நீட்டிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் முடிவு செய்தது.
2020-2021-ம் நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான கடைசி தேதி செப்டம்பர் 30-ந்தேதியாக இருந்தது. பின்னர் இது அக்டோபர் 31-ந்தேதியாகவும், இந்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது இதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2020-2021-ம் ஆண்டில் சர்வதேச பரிவர்த்தனை மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்களின் அறிக்கையை கணக்காளர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, அக்டோபர் 31-ந்தேதியாக இருந்தது. பின்பு இது நவம்பர் 30-ந்தேதியாகவும் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 31-ந்தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது கடைசி தேதி பிப்ரவரி 15-ந்தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2021-2022 நிதியாண்டுக்கான வருமான வரி தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான கடைசி தேதி அக்டோபர் 31-ந்தேதியாக இருந்தது. பின்னர் இது நவம்பர் 30-ந்தேதியாகவும், இந்த ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சுற்றறிக்கைகளை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X