என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது- 12 மூட்டைகள் பறிமுதல்
Byமாலை மலர்11 Jan 2022 11:18 AM GMT (Updated: 11 Jan 2022 11:18 AM GMT)
பாளை அருகே 12 மூடை ரேஷன் அரிசி கடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
பாளை அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், திம்மராஜபுரம் அருகே உள்ள பசும்பொன் நகரில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 12 மூட்டைகளில் 450 கிலோ எடை உள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த மகராஜன் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் பல்வேறு வீடுகளுக்குச் சென்று ரேஷன் கடையில் இலவசமாக கொடுத்த அரிசியை குறைந்த விலைக்கு பெற்று, அதை கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X