என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜவுளிக்கடையில் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்11 Jan 2022 10:07 AM GMT (Updated: 11 Jan 2022 10:07 AM GMT)
திருச்சியில் ஜவுளிக்கடையில் திருடிய சம்பவத்தில் போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 42). இவர் திருச்சி அலங்கநாதபுரம் பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு, இரவு கடையை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் வழக்கம் போல், மீண்டும் கடையை திறக்க சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கடைக்குள் இருந்த 5 சேலைகள், 25 நைட்டிகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து திருச்சி காந்தி மார்க்கெட் போலீசில் வினோத் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாஞ்சில் குமார் வழக்குப்பதிவு செய்து, திருச்சி தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சாதிக்பாட்சா, திருச்சி சந்தானபுரம் கல்பாளையம் சின்ன ஒட்ட தெரு பகுதியைச் சேர்ந்த இம்ரான்கான் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, திருட்டு போன சேலை மற்றும் நைட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 42). இவர் திருச்சி அலங்கநாதபுரம் பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு, இரவு கடையை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் வழக்கம் போல், மீண்டும் கடையை திறக்க சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கடைக்குள் இருந்த 5 சேலைகள், 25 நைட்டிகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து திருச்சி காந்தி மார்க்கெட் போலீசில் வினோத் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாஞ்சில் குமார் வழக்குப்பதிவு செய்து, திருச்சி தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சாதிக்பாட்சா, திருச்சி சந்தானபுரம் கல்பாளையம் சின்ன ஒட்ட தெரு பகுதியைச் சேர்ந்த இம்ரான்கான் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, திருட்டு போன சேலை மற்றும் நைட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X