search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாராபுரத்தில் 150கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

    தாராபுரம் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங்சாய் உத்தரவின்படி போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் தாராபுரம் என்.ஜி.ஓ. காலனி பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள குடோனை வாடகைக்கு எடுத்து ஹரிபிரசாத் (வயது 28) என்பவர் புகையிலை பொருட்களை பதுக்கி விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உத்தரவின்பேரில் தாராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் ஹரிபிரசாத்தை கைது செய்தனர். மேலும் குடோனில் இருந்த 150 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×