search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டிய 4 பேர் கைது

    நாட்டறம்பள்ளி அருகே கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது சஞ்சிவினூர் ஏரி கரை அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 3 வாலிபர்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

    அந்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அந்த வாலிபர்கள் தப்பி ஓட முயன்றபோது அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் வாணியம்பாடி அருகே அரப்பாண்டகுப்பம் மந்திரி வட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் சக்திவேல் (வயது24), பசுபதி (வயது23) சிக்கணாங்குப்பம் டேங்க் வட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் அபினேஷ் (வயது19), ரமேஷ் (வயது19) என தெரிய வந்தது.

    அவர்கள் இருந்த இடத்தில் சோதனை செய்த போது இரும்புராடு, சிறிய கடப்பாரை, மிளகாய்ப்பொடி, ஆகியவை இருந்தது. கொள்ளை அடிக்க திட்டம் தீட்டிக் கொண்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து நாட்டறம் பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து இரும்பு ராடு, கடப்பாரை மற்றும் மிளகாய் பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×