என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவள்ளூர் அருகே கடைக்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்11 Jan 2022 9:35 AM GMT (Updated: 11 Jan 2022 9:35 AM GMT)
திருவள்ளூர் அருகே கடைக்காரரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த குப்பம்மாள் சத்திரம் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 31). இவர் குப்பம்மாள் சத்திரம் பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு வந்த பாண்டூரை சேர்ந்த ஸ்டீபன் (29) மற்றும் ராஜ்குமார் (31) ஆகியோர் ஓசியில் குளிர்பானம் கேட்டதாக கூறப்படுகிறது. சிலம்பரசன் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை தகாத வார்த்தையால் பேசி கையாளும் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிலம்பரசன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்டீபன் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X