search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே கடைக்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

    திருவள்ளூர் அருகே கடைக்காரரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த குப்பம்மாள் சத்திரம் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 31). இவர் குப்பம்மாள் சத்திரம் பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு வந்த பாண்டூரை சேர்ந்த ஸ்டீபன் (29) மற்றும் ராஜ்குமார் (31) ஆகியோர் ஓசியில் குளிர்பானம் கேட்டதாக கூறப்படுகிறது. சிலம்பரசன் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை தகாத வார்த்தையால் பேசி கையாளும் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிலம்பரசன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்டீபன் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×