search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவல் சண்டை
    X
    சேவல் சண்டை

    திருவாலங்காடு அருகே சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 2 பேர் கைது

    திருவாலங்காடு அருகே சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருவாலங்காடு அடுத்த மணவூர் கண்டிகை கிராமத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சுங்கு அதிரடியாக சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து போட்டி ஏற்பாட்டாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சொகுசு கார், ஆட்டோ மற்றும் ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×