search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது

    திருவள்ளூர் அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அன்னபூரணி (36). சிவகுமார் அடிக்கடி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து உள்ளார். மேலும் அவரது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த சிவக்குமார் மனைவியை தகாத வார்த்தையால் பேசி, அடித்து உதைத்து உள்ளார். பின்னர் முட்செடியால் அவரது கண்ணில் குத்தி கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அன்னபூரணி மப்பேடு போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×