என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கமுதியில் கண்மாய் மடையில் சிக்கிய சகோதரர்கள் மீட்பு
Byமாலை மலர்10 Jan 2022 11:11 AM GMT (Updated: 10 Jan 2022 11:39 AM GMT)
கமுதியில் கண்மாயில் மீன் பிடித்த சகோதரர்கள் தவறி விழுந்து கண்மாய் மடையில் சிக்கினர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அல்லாபிச்சை தெருவை சேர்ந்தவர் முகைதீன் அப்துல்காதர். இவரது மகன்கள் சந்தோஷ் ரகுமான் (வயது24), அப்துல் கலாம் (20).
இருவரும் நேற்று முழு ஊரங்கு என்பதால் பெரிய தர்கா பின்புறமுள்ள கண்மாய் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது கண்மாய் கரையில் உள்ள தண்ணீர் செல்லும் மடை பகுதி எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது.
இதனால் மீன் பிடித்துக்கொண்டிருந்த இருவரும் மடையின் கதவு பகுதியில் விழுந்து சிக்கி அதில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கமுதி டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மடையில் சிக்கிய சகோதரர்களை மீட்டனர். பின்பு அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X