search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பனியன் தொழிலாளர்களுக்கு 5 நாட்கள் பொங்கல் விடுமுறை

    ஒவ்வொரு ஆண்டும் பனியன் தொழிலாளர்களுக்கு பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 3 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பனியன் தொழிலாளர்களுக்கு பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 3 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்தநிலையில் வருகிற 13-ந் தேதி போகி பண்டிகை, 14-ந்தேதி பொங்கல், 15-ந்தேதி மாட்டுப்பொங்கல், 16-ந்தேதி உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து வருகிற 14-ந்தேதி முதல் தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்படுகிறது.

    வருகிற 17, 18-ந் தேதிகளில் பஞ்சு, நூல் விலையை கண்டித்து பனியன் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. அனைத்து தொழில் அமைப்புகளும் உற்பத்தி நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    பொங்கல் விடுமுறையை தொடர்ந்து உற்பத்தி நிறுத்தம் காரணமாக தொழி லாளர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. வருகிற 19-ந்தேதி முதல் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்க உள்ளன. 
    Next Story
    ×