search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    10-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

    ஜோலார்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் இவர் கடந்த 5-ம் தேதி காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் பள்ளிக்கு செல்லவில்லை இதனால் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தது இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களிலும் அவரது நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பெற்றோர்கள் விசாரித்ததில் ஜோலார்பேட்டை அடுத்த கல்நார்சம்பட்டி பகுதியை சேர்ந்த திருப்பதி (வயது24) என்பவர் மாணவியை கடத்தி சென்றதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 6-ந்தேதி மாணவியின் பெற்றோர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் திருப்பதியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் பள்ளி மாணவியை கடத்திச் சென்ற தகவல் அறிந்ததும் அந்த வாலிபர் கடத்திய மாணவியை அழைத்துக் கொண்டு திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தார்.

    அதன் பிறகு அவர்கள் போலீசார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை கடத்தி சென்னைக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

    பெற்றோர்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பள்ளி மாணவி மைனர் என்பதால் புகார் அளிக்கப்பட்ட ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு திருப்பதி என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் உட்பட 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×