என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
Byமாலை மலர்10 Jan 2022 9:58 AM GMT (Updated: 10 Jan 2022 9:58 AM GMT)
சேலத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் கார்மேகம் தொடங்கிவைத்தார்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரி கல்லூரி மருத்துவ மனையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது. இதனை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து முன்களப்பணியாளர்கள் இந்த தடுப்பூசியை போட்டு கொண்டனர்.
2&ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் இல்லையெனில் 39 வாரம் முடிந்த அனைத்து சுகாதார பணியாளர், முன் கள பணியாளர் மற்றும் 60 வயதான இணை நோய் உள்ளவர்களுக்கும் 3&வதாக முன் எச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியிருந்தால் அதே வகை தடுப்பூசி, தகுதி உள்ள பயனாளிகளுக்கு போடப்படும்.
உருமாறிய கெரோனா ஓமைக்ரான் தொற்றாக பரவி வருவதால் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் தடுப்பூசி செலுத்தி தொற்றின் தீவிரத்தில் இருந்து அனைவரும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் கூறி உள்ளார்.
நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., ராஜேந்திரன் எம்.எல்.ஏ. டீன்.வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X