என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு 100 அடி உயர கம்பத்தில் புதிய தேசியக்கொடி ஏற்றப்பட்டது
Byமாலை மலர்10 Jan 2022 9:48 AM GMT (Updated: 10 Jan 2022 9:48 AM GMT)
முக்கிய ரெயில் நிலையங்கள் முன்பு 100 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்ற மத்தியஅரசு ஆணையிட்டது.
தஞ்சாவூர்:
இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் முன்பு 100 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்ற மத்தியஅரசு ஆணையிட்டது.
அதன்படி தஞ்சை ரெயில் நிலையம் முன்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி 100 அடி உயர கம்பத்தில் பெரிய அளவிலான தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி 24 மணி நேரமும் பறந்து கொண்டிருந்தது. இரவில் மின்னொலியில் ஜொலித்தது. தஞ்சை நகரின் எங்கு நின்று பார்த்தாலும் தேசியக்கொடி தெரியும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேசியக்கொடியில் லேசான அளவுக்கு சேதம் ஏற்பட்டது. உடனடியாக அதனை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள் தேசியக் கொடியை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
பின்னர் புதிய தேசிய கொடியை பொத்தானை அழுத்தி மின்சார எந்திரம் மூலம் ஏற்றினர். 8 நிமிடங்கள் வரை தேசியக்கொடி உச்சிக்கு செல்ல நேரம் எடுத்துக் கொண்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X