search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தைப்பூச கொடியேற்று விழா-சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சாமி
    X
    தைப்பூச கொடியேற்று விழா-சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சாமி

    எண்கண் முருகன் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்று விழா

    திருவாரூர் அருகே உள்ள எண்கண் சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள எண்கண் சுப்ரமணியசாமி கோவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிகவும் பிரசித்திப்பெற்றதும், பழமையானதுமாகும். 

    இந்த கோவிலில் தைப்பூச விழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதை முன்னிட்டு வள்ளி, தேவசேன சமேத முருகப் பெருமான் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி வீதியுலா வந்து சண்முகர் சன்னதி எதிரே உள்ள கொடிமரம் அருகே எழுந்தருள செய்யப்பட்டது. கொடிமரத்திற்கு மஞ்சள், திரவியம், பால், தயிர், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன.

    தொடர்ந்து மயில் படம் வரையப்பட்ட கொடிக்கு பூஜைகள் நடைபெற்று வேதமந்திரங்கள் முழங்க, கொடிமரத்தில் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. 

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் தைப்பூசத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் உள்ளதால் தேரோட்டம் நடத்துவதற்கு சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×