search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கயத்தாறில் குளியல் அறையில் வழுக்கி விழுந்து இளம்பெண் பலி

    கயத்தாறு அருகே உள்ள சாலைபுதூரில் மீனா என்ற இளம்பெண் குளியல் அறையில் எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்தார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள சாலைபுதூரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கயத்தாறு பஜாரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். 

    இவரது மனைவி மீனா (வயது 28). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. மீனாவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. 

    இந்நிலையில் இன்று அதிகாலை மீனா குளியலறையில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக இறந்தார். 

    இது தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×