search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

    சமத்துவபுரத்தில் ரேசன் கடை பின்புறமாக பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் சமத்துவபுரத்தில் ரேசன் கடை பின்புறமாக பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பத்மநாபன் தலைமையிலான போலீசார் அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர் .

    அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த மாதப்பூரைச் சேர்ந்த கார்த்தி (வயது 26) உள்ளிட்ட 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.10,500யை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×