என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
Byமாலை மலர்9 Jan 2022 8:43 AM GMT (Updated: 9 Jan 2022 8:43 AM GMT)
ராமநாதபுரம் அருகே பூட்டிய வீடுகளில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள கேணிக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டையை சேர்ந்தவர் அகமதுஅலி. இவர் மலேசியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மேலக்கோட்டையில் உள்ள வீட்டில் யாரோ புகுந்து பீரோவில் இருந்த 41 பவுன் நகையை கொள்ளையடித்தனர். மேலும் அதே பகுதியில் சீனிமுகம்மது என்பவரின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், அரை பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் திருடி சென்றது.
ராமநாதபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ராஜா மற்றும் கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புவனேசுவரன், நவநீத கிருஷ்ணன், ஜோதிமுருகன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கார்த்திக் உத்தரவிட்டார்.
இந்த தனிப்படையினர் சம்பவ இடங்களில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகள், செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X