search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனிப்படைகள்
    X
    தனிப்படைகள்

    கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

    ராமநாதபுரம் அருகே பூட்டிய வீடுகளில் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள கேணிக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலக்கோட்டையை சேர்ந்தவர் அகமதுஅலி. இவர் மலேசியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மேலக்கோட்டையில் உள்ள  வீட்டில்  யாரோ புகுந்து  பீரோவில் இருந்த   41 பவுன் நகையை கொள்ளையடித்தனர். மேலும் அதே பகுதியில்   சீனிமுகம்மது என்பவரின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், அரை பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம கும்பல் திருடி சென்றது.

    ராமநாதபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ராஜா மற்றும் கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.  கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    இந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புவனேசுவரன், நவநீத கிருஷ்ணன், ஜோதிமுருகன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கார்த்திக் உத்தரவிட்டார். 

    இந்த தனிப்படையினர் சம்பவ இடங்களில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகள், செல்போன் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×