search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அவினாசி அருகே லாரி விபத்து

    இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து தெக்கலூர் மேம்பாலம் அருகே நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு லாரி கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே திசையில் பெங்களூரில் இருந்து  கோவையை நோக்கி கொரியர் தபால்களுடன் மற்றொரு லாரிசென்றது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த செந்தில்குமார்  என்பவர் ஓட்டினார்.

    அதிகாலை தெக்கலூர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கொரியர் தபால் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் கொரியர் லாரியின் முன்பகுதி நொறுங்கியது.

    அப்போது இடிபாடுகளில் சிக்கிய டிரைவர் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கொரியர் லாரி டிரைவரை மீட்க முயன்றனர். இடிபாடுகளுக்குள் டிரைவரின் கால் சிக்கி கொண்டதால் அவர்களால் மீட்க முடியவில்லை.

    எனவே அவினாசி தீயணைப்பு நிலையம் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவினாசி தீயணைப்பு வீரர்கள் வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்தில் முன்னால் சென்ற லாரியின் பின்புறம் சேதமடைந்தது. நிற்காமல் சென்ற லாரியை கருமத்தம்பட்டி அருகே அவினாசி போலீசார்  மடக்கினர்.
    Next Story
    ×