என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சளி,காய்ச்சல் பாதிப்பு- அரசு ஆஸ்பத்திரிகளில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்
Byமாலை மலர்9 Jan 2022 6:59 AM GMT (Updated: 9 Jan 2022 6:59 AM GMT)
கடந்த ஒரு வாரமாக தலைமை அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல், சளி பாதித்து சிகிச்சை வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரி செயல்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது சளி, இருமல் பாதித்து பலரும் சிகிச்சை பெற வருகின்றனர்.
கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக காய்ச்சல், சளி இருந்தால் மருத்துவமனைக்கு வந்து டாக்டரின் ஆலோசனைகளை பெற வேண்டும் என சுகாதாரத்துறைஅறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக தலைமை அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல், சளி பாதித்து சிகிச்சை வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 200 முதல் 300 பேர் சளி பாதிப்புடன் வருகின்றனர்.
இதனால் மொத்த புறநோயாளிகள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,300 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,
சளி, காய்ச்சல் உடல்நலக்குறைவு இருந்தால் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியதால் பலரும் வருகின்றனர்.
இதனால் கொரோனா பாதிப்பு அதிகமாகி விட்டதாக அர்த்தமல்ல.சாதாரண சளி, காய்ச்சலுக்கு மருந்து, மாத்திரை பெற வருகின்றனர்.
மக்கள் பயப்பட வேண்டாம். தடுப்பூசி செலுத்தாதவருக்கு 24 மணி நேரம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X