என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் மளிகை கடையில் மதுவிற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்9 Jan 2022 6:47 AM GMT (Updated: 9 Jan 2022 6:47 AM GMT)
அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது
அன்னூர்:
கோவையில் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாராவது பதுக்கி வைத்து மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அன்னூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குறிப்பிட்ட கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கடையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்பட்டது உறுதியானது.
இதையடுத்து போலீசார் கடையில் இருந்து 75 குவார்ட்டர் பாட்டில்கள், 37 பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடையில் பதுக்கி மதுபாட்டில்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர் மனோகரன்(40) என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X