என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Byமாலை மலர்9 Jan 2022 6:36 AM GMT (Updated: 9 Jan 2022 6:36 AM GMT)
தஞ்சையில் சித்தி விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போனது.
தஞ்சாவூர்:
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி அருகே உள்ள கண்ணன் நகரில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. தற்போது ஊரடங்கால் வார இறுதி
3 நாட்களில் வழிப்பாட்டு தலம் மூடப்படும் என்பதால் இந்த கோவில் மூடப்பட்டிருந்தது.
கோவில் வெளிக்கதவு இரும்பு கேட்டில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக குடத்தில் துணிக்கட்டி வைக்கப்பட்டிருந்தது.
அதில் பக்தர்கள் உண்டியல் பணம் போட்டு வந்தனர். இந்த நிலையில்
இன்று காலை குடம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது மர்ம நபர்கள் பக்தர்கள்
செலுத்திய உண்டியல் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு
விரைந்து வந்த பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால்
உண்டியல் எண்ணப்படாததால் அதில் எவ்வளவு பணம்
திருட்டு போனது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து
மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X