search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலையில் தென்னந்தடுக்கு உற்பத்தி தீவிரம்

    தொடர்மழை காரணமாக தென்னந்தடுக்கு தொழில் முற்றிலுமாக முடங்கி தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
    உடுமலை:

    உடுமலை பகுதியில் தென்னந்தடுக்கு பின்னும் தொழிலில் அதிக அளவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் தென்னம் தடுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தொடர்மழை காரணமாக அந்த தொழில் முற்றிலுமாக முடங்கி தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தற்போது மழை இல்லாததால் தென்னந்தடுக்கு உற்பத்தி மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

    தொழிலாளர்கள் கூறுகையில்:

    பல மாத இடைவெளிக்குப் பிறகு தொழில் தொடங்கி உள்ளது. கோடை சீசனில் தேவை அதிகரித்து நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என தெரிவித்தனர்.
    Next Story
    ×