என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவில்கள் மூடலால் பூக்கள் விலை சரிவு
Byமாலை மலர்8 Jan 2022 7:42 AM GMT (Updated: 8 Jan 2022 7:42 AM GMT)
கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது.
திருப்பூர்:
மார்கழி தொடக்கம் முதல் பனிப்பொழிவு காரணமாக பூ வரத்து வெகுவாக குறைந்து விலை உயர்ந்திருந்தது. குறிப்பாக கோவில்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் அரளி கிலோ ரூ.240 முதல் ரூ.300 வரையும், செவ்வந்தி ரூ.180 முதல் ரூ.220 வரையும் விற்றது.
கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாட்டுதலங்களை மூட அரசு உத்தரவிட்டது. மார்கழி மாதம் துவங்கியது முதல் கோவில்களில் மண்டல பூஜைகள் நடந்து வருகிறது.
இந்தநிலையில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது. ஒரு கிலோ அரளி பூ கிலோ ரூ. 100 முதல் ரூ.120க்கும், செவ்வந்தி ரூ.100க்கும் விற்றது.
முதல் வாரத்திலேயே விலை குறைந்ததால், பூ வியாபாரிகள் கவலை அடைந்தனர். கிலோ ரூ.1,400 ஆக இருந்த மல்லிகை கிலோ ரூ.1100க்கு விற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X