என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலை மூணாறு சாலையில் முட்செடிகளால் விபத்து அபாயம்
Byமாலை மலர்8 Jan 2022 7:23 AM GMT (Updated: 8 Jan 2022 7:23 AM GMT)
செடிகள் அடர்ந்துள்ளதால் வாகனங்கள் நிறுத்தியிருப்பது தெரியாமல் அவ்வழியாக வரும் பிற வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது.
உடுமலை:
உடுமலை-மூணாறு சாலையில் புங்கன் ஓடை பாலம் உள்ளது. இங்கு எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு ‘எஸ்’ வளைவுடன் விபத்து பகுதியாக சாலை உள்ளது. இப்பகுதியில் பாலத்தின் இருபுறமும் வளர்ந்துள்ள முட்செடி, கொடிகள் சாலையை பெருமளவு ஆக்கிரமித்துள்ளன.
வளைவு பகுதியில் சாலையை மறைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த முட்புதரால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. அதோடு இந்த சாலையில் வரும் சுற்றுலா பயணிகளும் விதி மீறி, பாலத்திலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு வனப்பகுதியை ரசிக்கின்றனர்.
செடிகள் அடர்ந்துள்ளதால் வாகனங்கள் நிறுத்தியிருப்பது தெரியாமல் அவ்வழியாக வரும் பிற வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. மேலும் ஒதுங்க முடியாத அளவிற்கு சாலை குறுகலாக உள்ளதால் வாகனங்களில் செல்பவர்களையும் முட்செடிகள் காயப்படுத்தி வருகிறது.
அதே போல் இந்த சாலையில் பல இடங்களில் தற்போது பெய்த பருவ மழைக்கு சாலையின் இரு புறமும் பல இடங்களில் முட்புதர்கள் காணப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள செடி, கொடி உள்ளிட்ட புதர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X