என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசு குறைந்தது
Byமாலை மலர்8 Jan 2022 4:48 AM GMT (Updated: 8 Jan 2022 4:48 AM GMT)
தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்து நேரக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததுதான் முட்டை விலை சரிவுக்கு காரணம் என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.80 ஆக இருந்த முட்டை விலை, 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 4.90, பர்வாலா 4.70, பெங்களூர் 4.80, டெல்லி 5.05, ஹைதராபாத் 4.40, மும்பை 5.05, மைசூர் 4.75, விஜயவாடா 4.70, ஹொஸ்பேட் 4.40, கொல்கத்தா 5.40.
கடந்த 6-ந் தேதி ரூ.5.05 ஆக இருந்த முட்டை விலை 25 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.80 ஆனது. தற்போது 2 நாட்களில் மேலும் 20 பைசா குறைந்து ரூ.4.60 ஆனது. 2 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ.45 பைசா விலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்து நேரக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததுதான் முட்டை விலை சரிவுக்கு காரணம். ஊரடங்கால் முட்டை தேக்கம் அடையும் என்ற பயத்தில் பண்ணையாளர்கள், விரைவாக முட்டைகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்டு, என்.இ.சி.சி. நிர்ணயம் செய்யும் விலையை விட, குறைந்த விலைக்கு முட்டை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர் என்றார்.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.80 ஆக இருந்த முட்டை விலை, 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 4.90, பர்வாலா 4.70, பெங்களூர் 4.80, டெல்லி 5.05, ஹைதராபாத் 4.40, மும்பை 5.05, மைசூர் 4.75, விஜயவாடா 4.70, ஹொஸ்பேட் 4.40, கொல்கத்தா 5.40.
கடந்த 6-ந் தேதி ரூ.5.05 ஆக இருந்த முட்டை விலை 25 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.80 ஆனது. தற்போது 2 நாட்களில் மேலும் 20 பைசா குறைந்து ரூ.4.60 ஆனது. 2 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ.45 பைசா விலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்து நேரக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததுதான் முட்டை விலை சரிவுக்கு காரணம். ஊரடங்கால் முட்டை தேக்கம் அடையும் என்ற பயத்தில் பண்ணையாளர்கள், விரைவாக முட்டைகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்டு, என்.இ.சி.சி. நிர்ணயம் செய்யும் விலையை விட, குறைந்த விலைக்கு முட்டை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X