search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி
    X
    பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

    ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் செயல்படாது- பொங்கல் பரிசு வேறு நாளில் வழங்கப்படும்

    குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக கடைக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
    சென்னை:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு, 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் தொகுப்பினை வழங்கும் பணியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவுத்துறை மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடன் இணைந்து பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் விற்பனையாளர்கள் செய்து வருகிறார்கள்.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரேசன் கடைகளில் டோக்கன் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமையன்று ரேசன் கடைகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறன்று டோக்கன் பெற்றவர்களுக்கு 13ம் தேதிக்கு முன்பாக பொங்கல் பரிசை விநியோகிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக கடைக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். இக்காலகட்டத்திற்குள் தவிர்க்க இயலாத காரணங்களினால் பொருள்கள் தொகுப்பினைப் பெற இயலாதவர்கள் இம்மாத இறுதிவரை அதாவது 31/1/2022 வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×