என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆண்டிமடம் ஒன்றிய பாமக தலைவர் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்
Byமாலை மலர்7 Jan 2022 11:13 AM GMT (Updated: 7 Jan 2022 11:13 AM GMT)
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய பா.ம.க. தலைவர் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனத்தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் சாத்தனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் க.சுபாகர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
சாத்தனப்பட்டு சுபாகர் அவரது இளம் வயதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியின் தம்மை இணைத்துக் கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வந்தவர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ளும் அவர், பாட்டாளி மக்கள் கட்சியில் இளைஞர்களை இணைக்க கடுமையாக உழைத்தவர். என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.
மிகவும் குறைந்த வயதில் சுபாகர் நம்மை விட்டு பிரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுபாகர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து அரசியலிலும், வாழ்க்கையிலும் உயரங்களை அடைந்திருக்க வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனத்தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் சாத்தனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் க.சுபாகர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
சாத்தனப்பட்டு சுபாகர் அவரது இளம் வயதிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சியின் தம்மை இணைத்துக் கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வந்தவர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. கட்சி நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ளும் அவர், பாட்டாளி மக்கள் கட்சியில் இளைஞர்களை இணைக்க கடுமையாக உழைத்தவர். என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.
மிகவும் குறைந்த வயதில் சுபாகர் நம்மை விட்டு பிரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுபாகர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து அரசியலிலும், வாழ்க்கையிலும் உயரங்களை அடைந்திருக்க வேண்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X