search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    காதலித்து கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

    செஞ்சி அருகே காதலித்து கர்ப்பமாக்கிய பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செஞ்சி:

    செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் என்ற ஊரை சேர்ந்தவர் ரூபன் பெஞ்சமின். இவரது மகள் ஜோசினா அரன்சியா (வயது 26). இவர் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்தார்.

    செஞ்சி சங்கராபுரம் சத்திர தெருவை சேர்ந்தவர் ரவி மகன் மணிகண்டன் (26). வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். இருவரும் பேஸ்புக்கில் நட்பாக பழகி வந்த நிலையில் அது காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் ஜோசினாவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மணிகண்டன் கடந்த 6.7.2021 அன்று சத்தியமங்கலத்தில் வைத்து உல்லாசம் அனுபவித்தார்.

    இதனால் ஜோசினா தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜோசினா மணிகண்டனிடம் கேட்டார்.

    ஆனால் மணிகண்டன் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஜோசினா செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×