search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் நாளை செலுத்தி கொள்ள வேண்டும்- தென்காசி கலெக்டர் அறிவுரை

    தென்காசி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் நாளை நடைபெறும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கோபாலசுந்தரராஜ் கேட்டு கொண்டுள்ளார்.
    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இதுவரை தடுப்பூசி எடுத்து கொண்டவர்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. 

    மேலும் தற்போது புதிய வகை ஓமைக்ரான் கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளவும் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போடவேண்டிய பொதுமக்கள் தங்களுக்கு அருகே உள்ள மையங்களுக்கு ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
    Next Story
    ×