என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கென்யாவில் இருந்து திருப்பூர் வந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி
Byமாலை மலர்7 Jan 2022 9:53 AM GMT (Updated: 7 Jan 2022 9:53 AM GMT)
ஜனவரி முதல்வார நிலவரப்படி வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு 235 பேர் வந்துள்ளனர்.
திருப்பூர்:
ஒமைக்ரான் பரவலை தடுக்க வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் வருவோர் டிசம்பர் முதல் வாரம் முதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
சென்னை, திருச்சி, கோவை விமான நிலையத்தில் இருந்து திருப்பூர் வந்த 120 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வீட்டு தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜனவரி முதல்வார நிலவரப்படி வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் மாவட்டத்துக்கு 235 பேர் வந்துள்ளனர்.
இவர்களில் 7 நாள் வீட்டுத்தனிமை நிறைவு செய்த 171 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 168 பேருக்கு கொரோனா இல்லை. 3 பேருக்கு கொரோனா உறுதி யாகியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:
வெளிநாட்டில் இருந்து வந்த 171 பேரை பரிசோதித்ததில் 168 பேருக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. கென்யாவில் இருந்த வந்த 3 பேருக்கு கொரோனா உறுதியாகி, எஸ் ஜீன் எனப்படும் ஒமைக்ரான் முதல் நிலை அறிகுறி தெரியவந்துள்ளது.
இவர்களது ரத்த மாதிரி சென்னை மண்டல பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வந்த பின் மற்ற விபரங்களை தெரிவிக்க முடியும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X