search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா கடத்திய பிராங்க்ளின்
    X
    கஞ்சா கடத்திய பிராங்க்ளின்

    கஞ்சா கடத்திய வாலிபர் கைது

    திண்டுக்கல்லில் ஆட்டோவில் 25 கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ஆரோக்கியமாதா தெருவைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் (வயது 43). இவர் ஆட்டோவில் கஞ்சாவை கடத்தி விற்பனைக்கு கொண்டு வருவதாக எஸ்.பி. தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, சேக்தாவூது, எஸ்.எஸ்.ஐ. நாராயணன், செந்தில், பிரபாகர், சங்கர் உள்ளிட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தெய்வசிகாமணி புரத்தில் கஞ்சாவை விற்பனைக்காக பிராங்க்ளின் கொண்டுவந்த போது அவரை மடக்கி பிடித்தனர்.

     கஞ்சாவை வாங்க வந்த நெப்போலியன், ஹரி சங்கர் ஆகியோர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

    இதனையடுத்து போலீசார் பிராங்க்ளினை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×