என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முழு ஊரடங்கில் புறநகர் மின்சார ரெயில் சேவை குறித்த விவரம்...
Byமாலை மலர்7 Jan 2022 7:18 AM GMT (Updated: 7 Jan 2022 7:18 AM GMT)
கொரோனா முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபடக்கூடிய அரசு, தனியார் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவசர பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்யலாம்.
சென்னை:
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொது போக்குவரத்து அன்று நிறுத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் அன்று முழுவதும் இயங்காது. வாடகை கார்கள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயங்காது. அதேபோல சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.
நீண்ட தூரம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம்போல் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த சேவையில் மாற்றம் இல்லை. பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் ரெயில் நிலையங்களுக்கு சென்று பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புறநகர் மின்சார ரெயில் சேவையை பொறுத்தவரை அத்தியாவசியமாக கருதப்படுகிறது. முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக்கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல வசதியாக மின்சார ரெயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படவில்லை.
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்துள்ளது. அதனை ஏற்று பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் மின்சார ரெயில் சேவை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 4 வழித்தடங்களில் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. பொது ஊரடங்கையொட்டி 300 ரெயில்களை இயக்குவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வழக்கம் போல அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சார ரெயில் சேவை நடைபெறும். ரெயில்களில் பயணம் செய்வதற்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. டிக்கெட் வழங்குவதில் எந்த நடைமுறை மாற்றமும் செய்யப்படவில்லை.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொது போக்குவரத்து அன்று நிறுத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் அன்று முழுவதும் இயங்காது. வாடகை கார்கள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயங்காது. அதேபோல சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.
நீண்ட தூரம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம்போல் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த சேவையில் மாற்றம் இல்லை. பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் ரெயில் நிலையங்களுக்கு சென்று பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புறநகர் மின்சார ரெயில் சேவையை பொறுத்தவரை அத்தியாவசியமாக கருதப்படுகிறது. முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக்கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல வசதியாக மின்சார ரெயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படவில்லை.
50 சதவீதம் மின்சார ரெயில்களை இயக்க சென்னை ரெயில்வே கோட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்துள்ளது. அதனை ஏற்று பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் மின்சார ரெயில் சேவை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் 4 வழித்தடங்களில் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. பொது ஊரடங்கையொட்டி 300 ரெயில்களை இயக்குவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வழக்கம் போல அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சார ரெயில் சேவை நடைபெறும். ரெயில்களில் பயணம் செய்வதற்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. டிக்கெட் வழங்குவதில் எந்த நடைமுறை மாற்றமும் செய்யப்படவில்லை.
கொரோனா முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபடக்கூடிய அரசு, தனியார் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவசர பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்யலாம்.
இதையும் படியுங்கள்... அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க 13 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X