search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குரும்பூர் அருகே பயங்கரம்: மூதாட்டியை கொன்று 5 பவுன் நகை கொள்ளை

    வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்தது 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள அம்மன்புரத்தை அடுத்த திருவள்ளுவர் மேற்கு தெருவை சேர்ந்தவர் காசி என்ற பெருமாள். இவரது மனைவி நாகூராள் (வயது85).

    இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு அவரது பேரன் தினமும் உணவு வாங்கி கொடுப்பது வழக்கம். நேற்றிரவு மூதாட்டி வழக்கம்போல் தூங்க சென்றார். 

    இந்நிலையில் இன்று காலை அவருக்கு உணவு கொடுப்பதற்காக அவரது வீட்டுக்கு பேரன் சென்றார். அப்போது ரத்த காயங்களுடன் நாகூராள் பிணமாக கிடந்தார். 

    மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேஷ், குரும்பூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் மூதாட்டியின் நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கில் அவரை கொன்று விட்டு மர்ம கும்பல் நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது. 

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை-கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×