என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சட்டசபையில் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்யும் மசோதா தாக்கல்
Byமாலை மலர்7 Jan 2022 6:24 AM GMT (Updated: 7 Jan 2022 6:32 AM GMT)
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட அனைத்து கூட்டுறவு சங்க தேர்தல்களையும் ரத்து செய்ய தற்போதைய தி.மு.க. அரசு முடிவு செய்து, அதற்கான சட்டமுன்வடிவு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நடைப்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைப்பெற்றதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 400 கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களுக்கு பூட்டு போட்டுக் கொண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும், கூட்டுறவு சங்க தேர்தல்கள் எங்கு நடந்தது என்பதே யாருக்கும் தெரியாது எனவும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட அனைத்து கூட்டுறவு சங்க தேர்தல்களையும் ரத்து செய்ய தற்போதைய தி.மு.க. அரசு முடிவு செய்து, அதற்கான சட்டமுன்வடிவு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத்தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நடைப்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைப்பெற்றதாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 400 கூட்டுறவு சங்கங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட்டது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களுக்கு பூட்டு போட்டுக் கொண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும், கூட்டுறவு சங்க தேர்தல்கள் எங்கு நடந்தது என்பதே யாருக்கும் தெரியாது எனவும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட அனைத்து கூட்டுறவு சங்க தேர்தல்களையும் ரத்து செய்ய தற்போதைய தி.மு.க. அரசு முடிவு செய்து, அதற்கான சட்டமுன்வடிவு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்த சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார். இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த மசோதா நிறைவேறும் நிலையில் கூட்டுறவு சங்கங்களில் சுமார் 20 ஆயிரம் பேரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வரும் என்பதோடு, தி.மு.க. அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்.
இதையும் படியுங்கள்... செங்கல்பட்டில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 2 பேர் உயிரிழப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X