என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த வாலிபரின் கை விரல்கள் துண்டானது
Byமாலை மலர்6 Jan 2022 9:32 AM GMT (Updated: 6 Jan 2022 9:32 AM GMT)
நெல்லை சந்திப்பில் இறந்த முதியவரின் இறுதி ஊர்வலத்தில் வாலிபர் ஒருவர் பட்டாசு வெடித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு கையில் வெடித்ததில் 3 விரல்கள் துண்டானது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் நேற்று உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இவரது உடல் சிந்துபூந்துறை மின் மயான தகன மேடைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப் பட்டது. அப்போது பட்டாசும் வெடிக்கப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட அவரது உறவினரான சுத்தமல்லியை சேர்ந்த பலவேசம் என்பவர் பட்டாசு வெடித்து கொண்டு இருந்தவர்களிடம் இருந்து பட்டாசை வாங்கி அவர் பற்ற வைத்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கையில் இருந்து விடுவிப்பதற்குள் பட்டாசு வெடித்தது. இதனால் அவரது கையில் 3 விரல்கள் துண்டாகி ரத்தம் கொட்டியது.
உடனே அவரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X