என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம், 20 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்6 Jan 2022 8:03 AM GMT (Updated: 6 Jan 2022 8:03 AM GMT)
ஒட்டன்சத்திரத்தில் கமிசன் கடை உரிமையாளர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மற்றும் 20 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டி சாலையில் வசித்து வருபவர் முத்துச்சாமி (வயது 55). இவர் ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட்டில் கமிசன் கடை வைத்துள்ளார். தனது மருமகனுடன் வீட்டில் இருதளங்களில் வசித்து வருகிறார். கோவையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக நேற்று தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அரிவாளால் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவையும் உடைத்து அதிலிருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இன்று காலை ஊர் திரும்பிய முத்துச்சாமி மற்றும் குடும்பத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேல்தளத்தின் பூட்டை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அங்கு செல்லவில்லை.
இதனால் அங்கிருந்த நகைகள் தப்பின. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளையர்கள் விட்டுச்சென்ற அரிவாளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா என்பது குறித்தும், கொள்ளையர்கள் நடமாட்டம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே பகுதியில் கடந்த வாரம் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுபோன்ற தொடர் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டி சாலையில் வசித்து வருபவர் முத்துச்சாமி (வயது 55). இவர் ஒட்டன்சத்திரம் காந்திமார்க்கெட்டில் கமிசன் கடை வைத்துள்ளார். தனது மருமகனுடன் வீட்டில் இருதளங்களில் வசித்து வருகிறார். கோவையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக நேற்று தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அரிவாளால் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவையும் உடைத்து அதிலிருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இன்று காலை ஊர் திரும்பிய முத்துச்சாமி மற்றும் குடும்பத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேல்தளத்தின் பூட்டை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அங்கு செல்லவில்லை.
இதனால் அங்கிருந்த நகைகள் தப்பின. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளையர்கள் விட்டுச்சென்ற அரிவாளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா என்பது குறித்தும், கொள்ளையர்கள் நடமாட்டம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே பகுதியில் கடந்த வாரம் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுபோன்ற தொடர் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X