என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக கேள்வி-நேரம் நேரலை
Byமாலை மலர்6 Jan 2022 5:43 AM GMT (Updated: 6 Jan 2022 8:16 AM GMT)
தமிழக சட்டமன்ற வரலாற்றில் இன்று முதல் முறையாக சபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
சென்னை:
தமிழக சட்டசபை நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கூடிய சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் சட்டசபையை 2 நாட்கள் நடத்துவது என்றும் சபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக சபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
* ஒட்டப்பிடாரத்தில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படுமா? என உறுப்பினர் சண்முகையா எழுப்பிய கேள்விக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.
* சேலம் கோழிக்கால்நத்தம்- வடுகப்பட்டி- வைகுந்தம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என உறுப்பினர் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டதற்கு சாலையை விரிவுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.
* கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என கூறிய ஐ.பி.செந்தில்குமாருக்கு கூட்டுறவுத்துறை சார்பில் கல்லூரி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.
* வேளச்சேரி ஒரு வழிப்பாலத்தை இருவழியாக மாற்ற வேண்டும் என்ற உறுப்பினர் ஹசன் மெளலானா கோரிக்கையை, சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து இருவழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
* ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற தளி உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கைக்கு, ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்தார்.
இவ்வாறு சபையில் விவாதங்கள் நடைபெற்றன.
தமிழக சட்டசபை நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கூடிய சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் சட்டசபையை 2 நாட்கள் நடத்துவது என்றும் சபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக சபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
* ஒட்டப்பிடாரத்தில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படுமா? என உறுப்பினர் சண்முகையா எழுப்பிய கேள்விக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.
* சேலம் கோழிக்கால்நத்தம்- வடுகப்பட்டி- வைகுந்தம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என உறுப்பினர் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டதற்கு சாலையை விரிவுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.
* கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என கூறிய ஐ.பி.செந்தில்குமாருக்கு கூட்டுறவுத்துறை சார்பில் கல்லூரி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.
* வேளச்சேரி ஒரு வழிப்பாலத்தை இருவழியாக மாற்ற வேண்டும் என்ற உறுப்பினர் ஹசன் மெளலானா கோரிக்கையை, சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து இருவழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
* ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற தளி உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கைக்கு, ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பில்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்தார்.
இவ்வாறு சபையில் விவாதங்கள் நடைபெற்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X