search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

    தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 7 துண்டு சீட்டுகளை கையில் வைத்துக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் மசூதி தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு பெட்டி கடை அருகே நின்று கொண்டிருந்த ஒரு நபர் தான் வைத்திருந்த பையுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 7 துண்டு சீட்டுகளை கையில் வைத்துக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடமிருந்த துண்டு சீட்டுகளை பறிமுதல் செய்து அவரிடம் இருந்த ரொக்கப் பணம் ரூபாய் 700 யை கைப்பற்றி அவரிடம் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×