என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டில் புகுந்து நகை-பணம் திருடியவர் கைது
Byமாலை மலர்5 Jan 2022 10:03 AM GMT (Updated: 5 Jan 2022 10:03 AM GMT)
வீடு புகுந்து நகை-பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், ஜன.5
சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டி வெள்ளையன் வட்டம் மலங்காடு பகுதியை சேர்ந்தவர் சின்னதாயி (வயது 65). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் கடந்த டிசம்பர் மாதம் 28 தேதி வீட்டை பூட்டிவிட்டு மின்சாரம் கணக்கிடும் மீட்டர் பாக்ஸ் மீது வீட்டு சாவியை வைத்து விட்டு மளிகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் பீரோவில் இருந்த தங்க செயின், மோதிரம், தோடு உள்பட 7 பவுன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 25) என்ற வாலிபரை கைது செய்தனர்.இவரிடமிருந்து திருடுபோன பொருட்களை போலீசார் மீட்டனர்.இதைத்தொடர்ந்து போலீசார் , நாகராஜனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X