என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாணியம்பாடி நர்சுக்கு ஒமைக்ரான் தொற்று?
Byமாலை மலர்5 Jan 2022 9:56 AM GMT (Updated: 5 Jan 2022 9:56 AM GMT)
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளரா? என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த, நர்ஸ் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வேலூர் சங்கரன் பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் நர்சாக பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு உள்ள தொற்று குறித்து மேலும் பரிசோதனைக்காக ஐதராபாத்திற்கு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது.
வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நர்சுக்கு ஒமைக்ரான் தொற்றா? என கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X