என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பொங்கல் பரிசு தொடர்பாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண்
Byமாலை மலர்4 Jan 2022 1:51 PM GMT (Updated: 4 Jan 2022 1:51 PM GMT)
ரேஷன்கார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் தினமும் சுழற்சி முறையில் 150 முதல் 200 ரேஷன்கார்டுகளுக்கு பரிசுத்தொகுப்பு, வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கரும்பு உள்பட 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து ரேஷன்கடைகளிலும் இன்று முதல் பொருட்கள் வினியோகம் தொடங்கி 10-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகத்தை முறைப்படுத்தும் வகையில் தெரு வாரியாக உள்ள ரேஷன்கார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் தினமும் சுழற்சி முறையில் 150 முதல் 200 ரேஷன்கார்டுகளுக்கு பரிசுத்தொகுப்பு, வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிசுத்தொகுப்பு வழங்கும் நாள், நேரம் குறித்த விவரம் அடங்கிய டோக்கன்கள் பொதுமக்களுக்கு முன்பாகவே வழங்கப்படும்.அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் விடுதலின்றி பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். இப்பணியில் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பினால் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் கைபேசி எண்களிலும் மாவட்ட கலெக்டர் அலுவலக கண்காணிப்பு அறை தொலைபேசி 04567-230506 எண்ணிலும் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X