என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜப்தி நடவடிக்கையால் உழவர் மரணம்: குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்- அன்புமணி
Byமாலை மலர்3 Jan 2022 11:02 AM GMT (Updated: 3 Jan 2022 11:02 AM GMT)
தனியார் நிதி நிறுவனத்தின் ஜப்தி நடவடிக்கையால் அதிர்ச்சியில் உயிரிழந்த உழவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
பா.ம.க இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-
டிராக்டர் கடனுக்கு பிணை அளித்ததற்காக 6 ஏக்கர் நிலத்தை ஸ்ரீராம் நிதி நிறுவனம் ஜப்தி செய்ய முயன்றதால் அதிர்ச்சியடைந்த செய்யூர் தொகுதி புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் என்ற விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது குடும்பத்திற்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடன் பெற்றவர் வறுமை காரணமாக தவணை செலுத்த முடியாத நிலையில், போதிய அவகாசம் தராமல் பிணை அளித்தவரின் வாழ்வாதாரத்தை நிதி நிறுவனம் பிடுங்க நினைத்தது தான் நீலமேகத்தின் உயிரிழப்புக்கு காரணம்; இதற்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும்!
நீலமேகத்தின் இறப்புக்கு நீதி கேட்டு உழவர்கள் அச்சரப்பாக்கத்தில் போராட்டம் நடத்துகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஜப்தி நடவடிக்கையையும் நிறுத்திவைக்க வேண்டும். இறந்த நீலமேகம் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-
டிராக்டர் கடனுக்கு பிணை அளித்ததற்காக 6 ஏக்கர் நிலத்தை ஸ்ரீராம் நிதி நிறுவனம் ஜப்தி செய்ய முயன்றதால் அதிர்ச்சியடைந்த செய்யூர் தொகுதி புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நீலமேகம் என்ற விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது குடும்பத்திற்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடன் பெற்றவர் வறுமை காரணமாக தவணை செலுத்த முடியாத நிலையில், போதிய அவகாசம் தராமல் பிணை அளித்தவரின் வாழ்வாதாரத்தை நிதி நிறுவனம் பிடுங்க நினைத்தது தான் நீலமேகத்தின் உயிரிழப்புக்கு காரணம்; இதற்கு அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும்!
நீலமேகத்தின் இறப்புக்கு நீதி கேட்டு உழவர்கள் அச்சரப்பாக்கத்தில் போராட்டம் நடத்துகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஜப்தி நடவடிக்கையையும் நிறுத்திவைக்க வேண்டும். இறந்த நீலமேகம் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X