என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மணலி புதுநகர் அருகே டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
Byமாலை மலர்3 Jan 2022 9:02 AM GMT (Updated: 3 Jan 2022 9:02 AM GMT)
மணலி புதுநகர் அருகே டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்தபோது மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர்:
மணலி புதுநகர் அருகேயுள்ள சோழவரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 48).
விளாங்காடுபாக்கம் மின் வாரிய அலுவலகத்தில் வயர் மேன் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு அருமந்தை பகுதியில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அம்மன் தாங்கல் ஏரிக்கரையோரம் உள்ள டிரான்ஸ் பார்மரில் பழுது பார்க்க பெருமாள் சக ஊழியர்களுடன் சென்றுள்ளார். டிரான்ஸ்பார்மரில் பழுதை சரி செய்து விட்டு பெருமாள் கீழே இறங்கிய போது அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கிவீசப்பட்ட அவரை சக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பெருமாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X