சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.40,000 வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
சேதமடைந்த நெற்பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.40,000 வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தாளடி மற்றும் சம்பா நெல் பயிர்கள் இன்னும் 15 நாட்கள் முதல் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. இதனால் வேளாண் பெருமக்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர் என்று நாளிதழ்களில் செய்தி வந்துள்ளன.
மேலும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லை உடனுக்குடன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் கனமழையில் நனைந்து முளை விட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்குள்ளாகி உள்ளனர். தொடர்ந்து இரண்டு பருவமழைக் காலங்களிலும் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, இனியும் மத்திய அரசு புயல் நிவாரண நிதி வழங்கவில்லை என்று காரணம் கூறாமல், ஏற்கெனவே அதிகாரிகள் கணக்கெடுத்துள்ள நிலப்பரப்புக்கு ஏற்றவாறு முழுமையாக சேதமடைந்த நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 என்பதை ரூ.40,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
நெற்பயிர் மறு சாகுபடி செலவு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 என்பதை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையினை உடனடியாக பெற்றுத் தர வேண்டும். அதோடு கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கும் இழப்பீட்டினை உடனடியாகக் கணக்கெடுத்து வழங்கிட வேண்டும்.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.