search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் (கோப்பு படம்)
    X
    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் (கோப்பு படம்)

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - தலைமை கொறடா அழைப்பு

    சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்க உள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 5ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்க உள்ளது. ஆளுநர் உரை முடிந்ததும் அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பதை முடிவு செய்யும். 

    கூட்டத்தொடரின் முதல்நாளான 5-ம் தேதி மாலை 6 மணியளவில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், சபையில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்து எம்எல்ஏக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

    இதுதொடர்பாக அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்,  5-1-2022 புதன்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்  கூறி உள்ளார்.
    Next Story
    ×