search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொலை, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் 3பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
    பல்லடம்:

    பல்லடத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மரக்கடை தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள கேரளாவைச் சேர்ந்த ரஞ்சித்  என்ற கண்ணன்(வயது 23), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அழகர் என்ற அழகர்சாமி(22)ஆகியோர் மற்றும் பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள சூர்யா என்கிற சூரிய ஜெகதீஷ்(27)ஆகிய 3 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது.

     மேலும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் வினீத்திடம் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார்.

    பரிந்துரையை ஏற்ற திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்  3பேரையும்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதையடுத்து மத்திய சிறையில் உள்ள 3பேரிடமும் குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

    Next Story
    ×