என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொலை, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்2 Jan 2022 8:32 AM GMT (Updated: 2 Jan 2022 8:32 AM GMT)
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் 3பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
பல்லடம்:
பல்லடத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மரக்கடை தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள கேரளாவைச் சேர்ந்த ரஞ்சித் என்ற கண்ணன்(வயது 23), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அழகர் என்ற அழகர்சாமி(22)ஆகியோர் மற்றும் பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள சூர்யா என்கிற சூரிய ஜெகதீஷ்(27)ஆகிய 3 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது.
மேலும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் வினீத்திடம் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார்.
பரிந்துரையை ஏற்ற திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் 3பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து மத்திய சிறையில் உள்ள 3பேரிடமும் குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X