search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூல்
    X
    நூல்

    நூல் விலை மீண்டும் உயர்வு திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி

    நூல்விலையை குறைக்க கோரி திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    கொரோனா பாதிப்பிற்கு பிறகு நூல் விலை மாதந்தோறும் உயர்ந்து வருகிறது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கவலையடைந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நூல் விலை ரூ.50 அளவுக்கு உயர்த்தப்பட்டதால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    எனவே நூல்விலையை குறைக்க கோரி திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைக்கப்பட்டது.

    இந்தநிலையில் ஜனவரி மாதத்திற்கான நூல் விலை இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ரூ.30 உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு கிலோ நூல் ரூ.350ல் இருந்து ரூ.380ஆக உயர்ந்துள்ளது.

    மாதந்தோறும் நூல் விலை உயர்த்தப்பட்டு வருவது திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பின்னலாடை வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என ஏற்றுமதியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    Next Story
    ×