என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கனமழையால் போக்குவரத்து பாதிப்பு- மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேர் பயணம்
Byமாலை மலர்1 Jan 2022 8:15 AM GMT (Updated: 1 Jan 2022 9:11 AM GMT)
கனமழை காரணமாக பஸ் போக்குவரத்து முடங்கியதால் புறநகர் மின்சார ரெயில்களில் கூடுதலாக 40 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்னை:
சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை பெய்தது. காலை முதலே மழை தூறிக்கொண்டே இருந்தாலும் பகல் 2 மணிக்கு பிறகு மிக கனமழை பெய்தது.
சென்னை மெரினா கடற்கரையில் அதிகபட்சமாக 24 செ.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 21 செ.மீட்டர் மழையும் பெய்தது. இதனால் சில மணி நேரத்தில் சென்னை நகரம் வெள்ளக்காடானது.
சாலைகளில் அதிக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் திடீரென்று வாகன போக்குவரத்து முடங்கியது. சென்னை நகரில் உள்ள அனைத்து சாலைகளிலுமே வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மணிக்கணக்காகியும் நின்ற இடத்தை விட்டு வாகனங்கள் நகரவில்லை.
இதனால் காலையில் அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் திணறினார்கள். பலர் வாகனங்களை அலுவலகத்திலேயே போட்டு விட்டு மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர். சென்னை விமான நிலையம்-விம்கோ நகர், பரங்கிமலை-சென்ட்ரல் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில் வழக்கமாக 1.25 முதல் 1.28 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர்.
கனமழை காரணமாக பஸ் போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்தனர். இதனால் மெட்ரோ ரெயிலில் அதிக அளவு கூட்டம் குவிந்தது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 321 பேர் பயணம் செய்தனர்.
கடந்த 29-ந் தேதி ஒரு லட்சத்து 28 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து இருந்த நிலையில், 30-ந் தேதி 30 சதவீதம் பயணிகள் அதிகமாக பயணம் செய்தனர்.
பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு அங்கு நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. அன்று மட்டும் சுமார் 6 லட்சம் பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர்.
சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை பெய்தது. காலை முதலே மழை தூறிக்கொண்டே இருந்தாலும் பகல் 2 மணிக்கு பிறகு மிக கனமழை பெய்தது.
சென்னை மெரினா கடற்கரையில் அதிகபட்சமாக 24 செ.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 21 செ.மீட்டர் மழையும் பெய்தது. இதனால் சில மணி நேரத்தில் சென்னை நகரம் வெள்ளக்காடானது.
சாலைகளில் அதிக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் திடீரென்று வாகன போக்குவரத்து முடங்கியது. சென்னை நகரில் உள்ள அனைத்து சாலைகளிலுமே வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மணிக்கணக்காகியும் நின்ற இடத்தை விட்டு வாகனங்கள் நகரவில்லை.
இதனால் காலையில் அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் திணறினார்கள். பலர் வாகனங்களை அலுவலகத்திலேயே போட்டு விட்டு மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர். சென்னை விமான நிலையம்-விம்கோ நகர், பரங்கிமலை-சென்ட்ரல் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில் வழக்கமாக 1.25 முதல் 1.28 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர்.
கனமழை காரணமாக பஸ் போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்தனர். இதனால் மெட்ரோ ரெயிலில் அதிக அளவு கூட்டம் குவிந்தது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 321 பேர் பயணம் செய்தனர்.
கடந்த 29-ந் தேதி ஒரு லட்சத்து 28 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து இருந்த நிலையில், 30-ந் தேதி 30 சதவீதம் பயணிகள் அதிகமாக பயணம் செய்தனர்.
பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு அங்கு நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. அன்று மட்டும் சுமார் 6 லட்சம் பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர்.
மேலும் புறநகர் மின்சார ரெயில்களிலும் அதிக அளவு மக்கள் பயணம் செய்தனர். அன்று மட்டும் 40 ஆயிரம் பயணிகள் கூடுதலாக மின்சார ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்...சட்டசபை 5-ந்தேதி கூடுவதால் எம்.எல்.ஏ.க்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X