என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேம்பாட்டு பணிகள் தொடக்கம்
Byமாலை மலர்28 Dec 2021 6:55 AM GMT (Updated: 28 Dec 2021 6:55 AM GMT)
விற்பனை கூடத்துக்குள் உள்ள முகப்பு ரோடு, குடோன், பரிவர்த்தனை கூடம் மற்றும் உலர்களத்துக்கு செல்லும் பாதையும் புதுப்பிக்கப்பட உள்ளது.
அவிநாசி:
அவிநாசி சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உட்கட்டமைப்பு பணி மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.
பிரதி திங்கள் தோறும் இங்கு நிலக்கடலை ஏலம் நடத்தப்படுகிறது. அவிநாசி, சேவூர், கோபி, நம்பியூர் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் நிலக்கடலையை ஏலத்துக்கு எடுத்து வருகின்றனர்.
சீசனின் போது நிலக்கடலையை அங்குள்ள உலர்களத்தில் உலர்த்தி காய வைத்து விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு செல்வது வழக்கம். இங்கு 1,000 முதல் 1,200 டன் நிலக்கடலையை உலர்த்தி வைக்க கூடுதலாக உலர்களம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மேலும் விற்பனை கூடத்துக்குள் உள்ள முகப்பு ரோடு, குடோன், பரிவர்த்தனை கூடம் மற்றும் உலர்களத்துக்கு செல்லும் பாதையும் புதுப்பிக்கப்பட உள்ளது.
இங்குள்ள பரிவர்த்தனை கூடங்களில் பழுது நீக்கப்பட்டு அவற்றின் மேற்கூரை புதுப்பிக்கப்பட உள்ளது.
அடுத்தாண்டு சீசனின் போது இந்த விற்பனைக்கூடம் புதுப்பொலிவுடன் காணப்படும் என விற்பனைக்கூட சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X