search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் ஸ்டாலின்
    X
    முதலமைச்சர் ஸ்டாலின்

    பாஜகவுக்கு எதிராக இந்திய அளவில் வெற்றிபெற உறுதியேற்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    தா.பாண்டியன் உருவப்பட திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி போன்று அரசியல், இலக்கியம் என இரண்டிலும் பயணித்தவர் தா.பாண்டியன் என தெரிவித்தார்.
    சென்னை:

    மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உருவப்படம் திறப்பு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. தா.பாண்டியன் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் தா.பாண்டியனுக்கு புகழஞ்சலி செலுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    தா.பாண்டியன் என்றாலே தலை தாழாத பாண்டியன். எப்போதும், யாருக்கும், எந்த சூழ்நிலையிலும் அஞ்சாத பாண்டியனாகதான் வாழ்ந்து மறைந்தார்.

    தா.பாண்டியன் படம் மட்டுமல்ல, பாடம் என தி.க. தலைவர் வீரமணி குறிப்பிட்டார். இந்த பாடத்தை தமிழக மக்கள் ஏற்கனவே புகட்டி விட்டார்கள். இந்திய அளவில் இந்த பாடத்தை நாம் யாருக்கு புகட்ட வேண்டுமோ, அவர்களுக்கு புகட்டிட வேண்டும் என அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். நல்ல காலம் பிறக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என தா.பாண்டியன் மதுரை மாநாட்டில் எடுத்துரைத்தார். இன்றைக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் இதைப் பார்க்க அவர் இல்லையே என்ற ஏக்கம்தான் எனது மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

    Next Story
    ×